15 December 2012

திரிபுநிலை


உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர்  தாக்குகிறார்களே...நீங்கள்  திருப்பியடிக்க வேண்டாமா ?

தேவையில்லை.

நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம்  கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய்   மாறியே தீருகிறோம்.

பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ்  என்ற உணர்வுகளுக்கு ஆட்ப்படும் போதெல்லாம்  பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.

தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே  திரும்ப வந்தால் ,அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால் அது திரிபுநிலை.

கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக்  குற்றமன்று . குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது.

-வைரமுத்து